![]() |
பாவலர் பரிசுதிட்டம்
பாவலர் பரிசுதிட்டம்-32இல் பரிசு பெற்றவர்
பணி : கூட்டுறவுத் தணிக்கை உதவி இயக்குநர் (ஓய்வு) பாடல் படைக்க குறிக்கோள் : சிறந்த மரபு பாக்கள் சிறுகதைகள் எழுதுதல் முகவரி : 160, 14ஆம் தெரு, கிருட்டினா நகர், மதுரவாயில், சென்னை - 600 095 தொலைபேசி :95-44-23782236 பாவலர் பரிசு திட்டம்-33
எழுசீர் வண்ணக்குறட்டாழிசை-2
சந்தக் குழிப்பு: தனனா தனந்த தனனா தனந்த உரூபா 500 பரிசுபெறும் பாடல்: 1.தமிழா லுயர்ந்து தமிழா(ல்) வளர்ந்து வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி) : 2.இனமா னமின்றி இழிவா னநெஞ்ச மிசையோ டுதந்த படமே 3.அணிநா ணழிந்து துணிவே யிழந்து பிணியோ டுநின்ற தமிழா! 4.இமையா திரண்டு விழியோ டுவந்து நடமா டுகின்ற மயிலே! 5.தமிழே யுய(ர்)ந்த மொழியா குமென்ற வுண(ர்)வா லியங்கி யதையே 6.தலைமே லெழுந்த நரையே தளர்ந்த உட(ல்)மே(ல்) விரிந்த திரையே 7.உழவோ டுழன்று கடனா லெழுந்த குழியோ டழுந்து குறியே 8.கனவா கவந்து நினைவா கநின்று கனியா னநங்கை உறவே! முன்னரே பரிசு பெற்றோர் பாடல்கள்: விழியே துறந்து வழிதே டுகின்ற வினைதா னுகந்த நெறியோ? அறமே திறம்பி அரசே புனைந்து மறமே புரிந்த மடவோர் மனமே கனிந்து மறமே சிறந்து வளமே நிறைந்த தமிழே!
மறைவா யிருந்து கறையே நிறைந்து மறையோ துகின்ற மடையா!
பலபே ருடம்பு நொடியே சிதைந்து தெருவே கிடந்த தறமோ?
மடமே செறிந்து தொழவே புகுந்த மனைமா மடந்தை தனையே
கலையே நிறைந்து நிலையே உய(ர்)ந்து கனிவே வழங்கு மெழிலே!
வழியே மொழிந்து வரலா றழிந்து வளமே பொருந்த லழகோ?
அடியே வணங்கி அறிவே இழந்து மறமே மறந்த தமிழா அறிவே இழந்த ஒருநா டழிந்த வரலா றறிந்த உடனே
தமிழா துணிந்து தடையே கடந்து தகைவே புரிந்து வருவாய் மறையோ துகின்ற மனமேவு கின்ற உலகாளு மெங்க ளரசே! மழையா லளந்த மரமே அழிந்து மலடா னதிந்த நிலமே கலையா யுகந்து பொலிவா யமைந்து கருவா யிருந்த அமிழ்தே தமிழே பயின்று தமிழா லுய(ர்)ந்த தமிழா பயின்ற மொழியை தமிழா லுய(ர்)ந்து தமிழால் வள(ர்)ந்த தமிழா பசுந்த மிழிலே கருத்தூன்றுக
1. சந்தத்தையே சிலர் விளங்கிக்கொள்ள முயலாமல் பாட்டெழுதியிருந்தனர், 2. வழகாய், குழகாய், உழிந்து, மழம் என்பன போன்ற, அகரவரிசையைப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடிய சொற்களைப் பாடலிற் பெய்தல் விரும்பத்தக்கதன்று. 3. பதமா கனிந்து, அருந்த குறையே, என்பன முறையே பதமாக் கனிந்து, அருந்தக் குறையே, என்று புணரும். புணரின் சந்தம் பிழைக்கும். 4. வசை-வினை, பணி-படை, தமிழ்-சதி எதுகையாகா. 5. இவை தமிழல்ல பதம்(செவ்வி), பதி(தலைவன்), சதி(சூழ்ச்சி), சிந்தை(மனம்), கணம்(நொடி) பாவலர் பரிசு திட்டம்-34
பாவலர்களே, பாவலர் பரிசு திட்டம் தொடங்கி 33 திங்கள்கள் கடந்தன. இதுவரையில் பல்வேறு பாவகைகளில். பல்வேறு சந்த வண்ண அமைப்புகளில், பல்வேறு அணிகள் அமையும் பாடல்களைப் படைத்துப் பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறீர்கள். உங்களால் மரபு யாப்புக்கே ஒரு மதிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தம், வண்ணம், சிந்துப் பாவகைகளை இலக்கணத்துடன் படைக்கும் திறன் உங்களுக்குக் கைவந்திருக்கிறது. உங்களால் ஒரு பாடலைப் பார்த்து அதன் யாப்பமைப்பை அறிந்து அந்த வகைப் பாடலைச் செம்மையாகப் படைக்கமுடியும். எனவே, இந்தத் திங்கள் முதல் பரிசு திட்டத்தில் ஒரு மாறுதல் செய்யப்படுகிறது. அதாவது ஒரு பாடலைக் கொடுத்து அதன் இலக்கணம் அறிந்து அந்த அமைப்பில் பாடல் எழுதுமாறு கேட்பதே அது. மற்றுமொரு மாறுதல். இப்புதிய முறைப் பரிசு திட்டத்தில் ஏற்கெனவே பரிசு பெற்றோரும் கலந்துகொள்ளலாம். பிற நெறிமுறைகள் வருமாறு : 1. ஒருவர் ஒரு பாடல் மட்டுமே அனுப்பலாம். 2. பாடல்களைத் தேர்வு செய்வதில் வல்லுநர்குழுவின் முடிவே இறுதியானது. 3. ஒரு திங்களுக்கு ஒரு முதற்பரிசு மட்டுமே (உரூபா 500 மதிப்புள்ள) நூல்களாக அனுப்பிவைக்கப்படும். 4. வெளியீட்டுக்குத் தகுதியானவை என்று வல்லுநர் குழுப் பரிந்துரைக்கும் பாடல்கள் தரவரிசைப்படி வெளியிடப்படும். 5. இப்புதிய முறையில் பரிசு பெற்றவர் பாடல் அதுமுதல் 2 ஆண்டுக்குத் தேர்வுக்கு உட்படுத்தப்பெறாது. ஆனால் அவர்தம் பாடல் தகுதி யுடையதாயின் வழக்கம்போல் வெளியிடப்படும். கீழ்க்கண்ட அமைப்பில் விரும்பிய பொருளில் ஒரு பாடல் இயற்றி வரும் கன்னி 20 (7-10-2007)க்குள் விடுக்க. நாடி நந்தமிழி னாளு நன்றிசொல |