![]() |
மாணாக்கர் பக்கம்
மாணாக்கர் பரிசுதிட்டம் - 125இன் விடை: திருக்குற்றாலம் எட்டெழுத்தாலான ஓர் ஊர்ப்பெயரின் எழுத்துகள் 58, 104 என்ற எண்ணுடைய இரண்டு குறட்பாக்களிலும் இருக்கின்றன. அவ்வூர்ப்பெயரைக் கண்டு எழுதுக என்று கேட்டிருந்தோம். அக்குறட்பாக்கள்: பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் இவ்விரண்டு குறட்பாக்களிலும் வரும், ற் றா ரு ல கு தி ம் க் ஆகிய எட்டெழுத்துகளையும் முறையாக அமைத்தால் திருக்குற்றாலம் என்ற ஊர்ப்பெயர் வரும். பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் இவ்விரண்டு குறட்பாக்களிலும் வரும், ரு ற மு கு தி ம் து ன் ஆகிய எட்டெழுத்துகளையும் முறையாக அமைத்தால் திருமுதுகுன்றம் என்ற ஊர்ப்பெயரும் வரும். இந்த விடையைக் கண்டுபிடித்து எழுதியவர் ச. தமிழ்ச்செல்வி-கள்ளக்குறிச்சி. எனவே இவ்விரு விடைகளில் எந்த ஒன்றும் சரியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சரியான விடை அனுப்பியோர் ச. தமிழ்ச்செல்வி-கள்ளக்குறிச்சி, * இக்குறியிடப்பெற்றவர் பரிசு பெறுகிறார். மாணாக்கர் பரிசுதிட்டம் - 126
ஆராலும் ஆக்கற் கரிதாய்த் துகளாலே (நாரில்-பன்னாடையில், அரிக்கும்-வடிகட்டும்.) இஃது ஒரு பிசிச்செய்யுள். இதன் விடையாக வரும் ஒரு சொல் இவ் வெண்பாவின் இறுதிச் சீராக அமையும். அந்தச் சொல்லைக் கண்டுபிடித்து வரும் கன்னி உ0 (7-10-2007) க்குள் எழுதி அனுப்புக. |