பாவலர் பரிசுதிட்டம்

பாவலர் பரிசுதிட்டம் - 43இல் பரிசு பெற்றவர்

பெயர்:அரங்க. இராமமூர்த்தி
பிறந்த நாள்: 20.02.1958
பெற்றோர்:சிவ. அரங்கநாதன் - தையல்நாயகி
கல்வித்தகுதி:க.மு., கல்.இ., இளமுனைவர்
பணி: தமிழ் விரிவுரையாளர்,
அ.மே.நி.பள்ளி, தவளக்குப்பம், புதுச்சேரி.
துணைவியார்: திருமதி. செயலட்சுமி
மக்கள்: இரா. மணிமேகலை, இரா. சத்தியா, இரா. இளம்பிறை
வெளியிட்ட நூல்: காலாப்பட்டு அருள்மிகு பாலமுருகன் அருட்பாமாலை
ஆசான்கள்: பேராசிரியர் மா.ரா. பூபதி, அந்தாதி அரசு அரியபுத்திரனார்
வழிகாட்டி: பேராசிரியர் முனைவர் வே. ச. திருமாவளவன்,
அந்தாதிச் செம்மல் அரங்க. நடராசன்
முகவரி: 35, வளமனைத் தெரு, பெரியகாலாப்பட்டு,
புதுச்சேரி-14.
பாவலர் பரிசு திட்டம்-42

உரூபா 500 பரிசு பெறும் பாடல் :

1.தாயினும் மேலாம் தாய்மொழி மறந்தே தருக்குவர் வேற்றவர் மொழியில்
வாயினில் கூட வண்டமிழ் மொழியை மறந்துமே உரைத்திடா இழிஞர்
தூயநன் மாந்தர் தொடர்புகழ் மறவர் தொல்லையில் ஈழமே மடிந்தும்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென என்றுவாழ்ந் திடுவார்.
- து. ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி.

வெளியீட்டுக்குத் தேர்வுபெற்ற பாடல்கள் (தரவரிசைப்படி):

2.தேய்ந்திடும் நிலையி லிருந்திடும் மொழிதான் சீர்பெறும் வகையினைத் தேடார்
மாய்ந்திடு மினத்தை மீட்டிட நாளும் மறுவழி கண்டிட விழையார்
ஞாயிறு திங்க யளத்திசை யெழினும் நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்
நாயினும் கீழ்மை மனத்தவர் நாட்டில் நடந்திடும் காலிரு விலங்கே.
- சு. சொக்கலிங்கம், புதுச்சேரி.

3.ஆயிரம் வழியில் அழிபொருள் தேடி அருங்கலை உணர்வினை இழந்து
தாயினும் சிறந்த தமிழினைப் போற்றாத் தன்மையால் நிலையிலே தாழ்ந்து
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
வாயிலே போட்டு வயிற்றினை நிரப்பி வருவதால் பெறும்பயன் என்ன?
- வேங்கடேசபாரதி.

4.தாயினும் உயர்வாய்த் தமிழினை எண்ணார் தமிங்கிலம் போற்றிவாழ்ந் திடுவார்
நாயினைப் போல்வார் நலிமொழி சுவைக்க நற்றமிழ் கெடுத்தலைந் திடுவார்
ஆயிரங் கொடுத்தால் அருந்தமிழ் மொழியை அயல்மொழி சேர்த்தழித் திடுவார்
ஞாயிறு திங்க யளத்திசை யெழினு நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்!
- பாவலர் செ. பழனி, புதுச்சேரி.

5.ஆயிர மாக அடுக்கிய செல்வர் அடுத்தவர்க் குதவிட நினையார்
வாயிலில் நின்று கேவிடும் மழலை வன்பசிக் குரலதும் கேளார்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
நாயினும் கேடர் திருமகள் ஏனோ நண்ணினாள் இவரைமண் மிசையே?
- கி. சிவகுமார், விருத்தாசலம்.

6.தாயினங் காவாத் தறிதலை யாகத் தமிழ்நில அரசினர் உள்ளார்!
தீயினுந் தீய தீமைகள் செய்தும் திரட்டுகின் றார்பெருஞ் செல்வம்!
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்!
நாயினுங் கீழாய் நக்கியே பிழைக்கும் நரியன வஞ்சகர் இவரே!
- பொறிஞர் அகன், கீரனூர்.

7.தாயினு மேலாந் தண்டமிழ் மறந்தே தமிழராய்ப் பேர்சொலித் திரிவார்
மாயிருள் ஞாலத் திடைக்கிடந் துழலும் மாக்கயளன் றெண்ணிடப் படுவார்
நாயினுங் கீழாய் நவிலுமோர் வாழ்வில் நாளுமே உலவுவார்; அவர்தாம்
ஞாயிறு திங்கள் யளத்திசை யெழினு நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்.
- கலைமாமணி கோவி. கலியபெருமாள், அரியாங்குப்பம்.

8.மாயிரு ஞால மொழிகளுக் குள்ளே மாண்புள நந்தமிழ் மொழியை
ஆயிரந் தடவை மேலென மேலோர் ஆய்ந்தறிந் துரைத்தனர் எனினும்
தாயினு மேலாந் தமிழ்நிலை தாழ்த்தும் தருக்கரை யடக்கிடாத் தமிழர்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்
- வே. இரா. சிவஞானவள்ளல், வேலூர்.

9.ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்
வாயினில் சோறு வந்திடி னதுவே வாழ்வென எண்ணியே மகிழ்வார்
நாயினுங் கேடர் நற்றிசை அறியார் நாளைய உலகினுக் கிவரோ
தீயினுங் கொடியர் தம்வழிச் சென்றால் தீய்ந்திடும் ஊருளார் நலமே!
- ஆ. குமாரசாமி, சென்னை.

10.சேயினைக் குப்பைத் தொட்டியி லெறிந்து திரிபவர் இங்குவாழ் கின்றார்
ஆயிரம் பொன்னை, இல்லடுக் ககத்தை அடையினும் தொண்டினை அறியார்;
ஞாயிறு திங்கள் எத்திசை யெழினு நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்
நாயினுங் கீழாய் வாழ்ந்திடும் இவரால் நலமுறா திந்தநா னிலமே!
- புலவர் வீ. வில்வநாதன், வெங்காளூர்.

முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் :

1.ஓய்வுறார்; என்றும் தந்நலம் காத்தல் ஒன்றுதான் தொழிலெனக் கொள்வார்;
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென என்றுவாழ்ந் திடுவார்;
தேய்வுறும் மாந்தர் துன்பற ஏதும் செய்திடார்; அன்பிலாக் கொடிய
பேயென வாழ்வார்; பெரும்பொருள் சேர்ப்பார்; பிறந்ததன் பயனறி யாரே!
- புலவர் சி. பெருந்தேவன், தவளக்குப்பம்.

2.காயெனக் கருதார்; கனியெனச் சுவையார் கையினில் கிடைத்தன வெல்லாம்
வாயினால் விழுங்கி வயிற்றினை நிரப்பி வாழ்ந்திடும் வாழ்வினை உவப்பார்;
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென என்றுவாழ்ந் திடுவார்;
நோயினால் வீழ்வார்; இவர்விழித் தெழவே நுவல்வதோர் அருஞ்செயல் காணீர்!
- இள. தமிழொளி, பொறையாறு.

3.காயினைக் கொண்டே கனிதனை விடுத்துக் களிப்புடன் உண்பதைப் போலே
தாயினைத் தமிழைத் தவிர்த்துமே மாற்றான் தாய்மொழி விரும்புகின் றனரே!
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென என்றுவாழ்ந் திடுவார்
நாயினும் கீழாய் வாழ்பவர் மண்ணில் நலங்களைப் பெறுவது மரிதே!
- பாலவர் மா. வரதராசன், சென்னை.

4.ஆயிரம் முறைகள் பேரறி வாளர் அருந்தமிழ்ச் சிறப்பினை விளக்கித்
தாயினும் சாலப் பரிந்துரைத் திடினும் தமிழரோ தகவுரை கேளார்!
நாயினும் கீழாய் நலிந்தயல் மொழியை நச்சிடும் மயக்கினில் சிக்கி
ஞாயிறு திங்க யளத்திசை யெழினும் நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்!
- புலவர் மா.சு. மணி, திருக்கழுக்குன்றம்.

5.நாயினும் கீழா மற்றவர் காலை நக்கியே வாழ்பவர் நடுவண்
தாயினும் மிக்க தாமெனு மன்பு தழைத்திட உழைப்பினைத் தந்து
மாயினு மன்றி வாழினுங் கொள்கை வாழ்ந்திட வாழ்பவர் என்றும்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்
- வே.ச. திருமாவளவன், புதுச்சேரி.

6.தாயினும் மேலாம் தண்டமிழ் நையத் தமிழினம் எங்கிலும் தாழ
நாயினும் கீழாய் நலிந்துழல் கின்றார் நவிலரும் துன்பமே உற்றார்
ஆயினும் இங்கே அவரவர் வாழ்வை அணிபெறச் செய்வதே நோக்காய்
ஞாயிறு திங்கள் எத்திசை எழினும் நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்
- பாவலர் காலையூர். நெய்தல் நாடன், புதுச்சேரி.

கருத்தூன்றுக

1. கொடுக்கப்பட்டது 'ஒருவகை மண்டிலப்பாவின் ஓரடி' என்று குறித்திருந்தேன். மண்டிலப்பா (விருத்தம்) என்பதை ஊன்றி நோக்காமல் சிலர் ஆசிரியப்பா, கலித்துறை முதலியன எழுதியிருந்தனர். சிலர் மண்டிலங்கள் படைத்திருந்தாலும் அவை அறுசீர், எண்சீர் மண்டிலங்களாக இருந்தன.

ஞாயிறு திங்க யளத்திசை எழினு நமக்கென வென்றுவாழ்ந் திடுவார்

என்று சீர்பிரித்தெழுதினால் கொடுக்கப்பட்டது முறையான ஓர் எழு சீர்மண்டில அடியாக அமையும். சிலர் இதனை வேறு வகை மண்டில அடிகளாகப் பிரித்திருந்தார்கள் எனினும் அத்தகைய அடியமைப்புடைய மண்டிலங்கள் இல்லை.

2. சிலர் எழுசீர் மண்டிலம் எழுதியிருப்பினும் சீர்கள் இலக்கணப்படி அமைய வில்லை.

3. இவ்வகைப் பாவில் 5ஆம் சீராகத் 'துவள்வோர்' என்ற மாச்சீர் வாராது. அங்கே விளச்சீர் வரவேண்டும்.

4. ஞாயிறு என்பதற்குக் கையிலே என்பது எதுகையாகாது. சீர் முதலில் வரும் 'கை' நெடிலாகக் கொள்ளப்பட்டாலும், அதைக் 'கய்' என்று குறிலொற்றாகக் கொள்வதே முறை. கைவேல் - மெய்வேல் (குறள் 774) என்பது காண்க.

5. பா-பி, மா-நி மோனையாகா.

6. போயயாரு உதவி என்று 'ஒரு' முன் உயிர்வர எழுதுவது பிழை. போயோர் உதவி என்று எழுதினாலும் இவ்விருசீரும் புணர்ந்தால் 'போயோ ருதவி' எனச்சீர் சிதையும்.

7. பேரம் (வணிகம்) சிரம் (தலை), சிந்தை (மனம்) பதவி (பணிநிலை) ஆசை (விருப்பம்) போதை (மயக்கம்) புவி (உலகு) ஆகிய பிறமொழிச் சொற்களைக் களைந்திருக்கலாம்.

பாவலர் பரிசு திட்டம் - 45

'மொழிப் பற்றிலா திருக்குமின நெடு நாணிலைத் திருத்தன் முடிந்திடாது'

என்பது ஒருவகை நாலடிப்பாவின் ஓரடி. இதன் சொற்கள் அனைத்தும் புணர்த்தெழுதப்பட்டுள்ளன. இதனைச் சீர்பிரித்து இன்ன வகைப் பாவென்றறிந்து, அவ்வகைப் பாவில் இதனை முதல், இடை, கடை ஆகிய விரும்பிய இடத்தில் அமைத்து ஒரு பாடல் இயற்றி வரும் மடங்கல் உ0 (5-09-2008) க்குள் விடுக்க.