
|
மாணாக்கர் பக்கம்
சென்ற இதழ்ப் பரிசு திட்டத்தின் விடை ஆராலும் ஆக்கற் கரிதாய்த் துகளாலே (நாரில்-பன்னாடையில், அரிக்கும்-வடிகட்டும்.) சரியான விடை அனுப்பியோர் *த. முத்தமிழ்-கோவை 18, * இக் குறியிடப்பட்டோர் பரிசு பெறுகின்றனர். மாணாக்கர் பரிசு திட்டம்-127
அடியில் சில சுவையான சுவைப் பகுதிகளும் அவை வரும் நூல்களும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எந்த நூலில் வருகிறது என்று குறிப்பிடுக. 1. தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் 2. கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம் 3. யாஅம் இரப்பவை 4. இளமையிற் சிறந்த வளமையும் இல்லை 5. நெடுநுகத்துப் பகல்போல 6. ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் 7. அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின் 8. தேன்மயங்கு பாலினும் இனிய. அவர்நாட்டு... 9. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 10. பெரியோரை வியத்தலும் இலமே நூல்கள்: தொல்காப்பியம், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு. விடையை வரும் துலை உ0 (6-11-2007)க்குள் அனுப்புக. |