ஆண்டு : கரு
இதழ் :
தி. ஆ. உ0௩௯, விடை,
14 - 05 - 2008
உலக்கைக் கொழுந்துகளும் குந்தாணி வேர்களும்!

புதுச்சேரி என்றிருந்த பொங்குதமிழ்ப் பேர்தன்னைக்
குதப்பினார் 'பாண்டி' என்று கூறுகெட்ட வெள்ளையர்கள் !

அதுவே தமிழ்ப்பெயர்என் றாய்ந்தறிந்து கூறிவிட்டார்
எதையும் அறிந்தவராம் எங்கள் ஊர்க் கொள்ளையர்கள்!

'பாண்டி' என்ற வெள்ளையனின் "பகரவீ" தான்எம்மை
ஆண்டவர்க்குச் சந்தனம்போல் அரியமணம் வீசிடுதாம்!

புதுச்சேரி என்றபெயர் நகர்க்குப் பொருந்தாதாம்!
அதைஏற்ற நடுவண் அரசுக் கறிவிலையோ!

உலகெங்கும் காணாஇவ் வுலக்கைக் கொழுந்துகளைப்
பலபடியாய்ப் பாராட்டிப் பட்டங்கள் தாரீரோ?

குறையேதும் இல்லாஇக் குந்தாணி வேர்களைநீர்
நிறைவாகப் பாராட்டிப் பரிசுகளை நீட்டீரோ?

உலகுபுகழ் 'நோபெல்' எனும் உயர்பரிசா மேஅதனைப்
பலர்புகழ்இவ் அறிஞர்பெறப் பரிந்துரைகள் செய்யீரோ?

( பகரவீ = மாந்தக்கழிவு )- இரா.தி