மாணாக்கர் பக்கம்

சென்ற இதழ் மாணாக்கர் பரிசு திட்டம் - 131 இன் விடைகள் :

செய்யவடவ்வையை =செய்யவள் + தவ்வையை - 167
நாணுதனாணு=நாணுதல் + நாணு - 1011
பக்கத்துட்டெவ்வோர்=பக்கத்துள் + தெவ் + ஓர் - 639
உண்ணடுங்கலஞ்சி=உள் + நடுங்கல் + அஞ்சி - 680
எனினுங்கொளறீது=எனினும் + கொளல் + தீது - 222
கேட்குஞாலநிரந்தினிது=கேட்கும்+ ஞாலம்+ நிரந்து + இனிது - 648
மறைப்பினடுங்கஞர்=மறைப்பின் + நடுங்கு + அஞர் - 1086
உண்டாண்டோரேஎர்=உண்டு + ஆண்டு + ஓர் + ஏஎர் - 1098
உக்கவமிழ்தற்றாறங்கணத்தர்=உக்க+அமிழ்து+அற்றால்+தம்+கணத்தர் - 720

முழுவதும் சரியான விடையளித்தோர் :

*மோ. மெய்ம்மொழி கரிக்கலாம்பாக்கம்,
*த. முத்தமிழ், கோவை,
தா.மு. கிருட்டினன், வளவனூர்.

*இக்குறியிட்ட முதலிருவரும் பரிசு பெறுகின்றனர்.

720ஆம் குறளில் 'கணத்தர்' என்பது கணவர் என்று அச்சானதற்கு வருந்துகிறோம்.

குறிப்பு : தெவ்+ஓர் என்று பிரித்தெழுதவேண்டியவற்றைச் சிலர் தெவ்வோர் என்றே பிரிக்காமல் எழுதி யிருந்தனர். ஞாலம் என்று எழுத வேண்டியதைச் சிலர் "ஞால' என்றே எழுதியிருந்தனர். 720 ஆம் குறளில் தம் என்று பிரிக்க வேண்டியசொல்லைச் சிலர் அம் என்று பிரித்திருந்தனர். நடுங்கு+அஞர் என்று பிரிக்க வேண்டியதைச் சிலர் நடுங்க + அஞர் என்று பிரித்திருந்தனர்.

மாணாக்கர் பரிசு திட்டம்-132
விடுகதை

"ஐயா!என்ற ழைக்கும் சொல்தான் அருவருப் பானதென்று
மெய்யாக அதற்கு நேராம் மேனாட்டு மொழி யின்சொல்லை
மையலால் பயன்ப டுத்தும் மடையன்நீ" என்றேன். நண்பன்,
"துய்யதொல் காப்பி யன்தான் சொன்னசொல் அச்சொல்" என்றான்!

அவன் குறிப்பிடும் அச் சொல் எது? அதைத் தொல்காப்பியர் எங்கே சொன்னார்? இடம் சுட்டுக.

விடைகள் வரும் மீனம் உ0 (03-04-2008) க்குள் வந்து சேர வேண்டும்.